மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 07-01-2020 | 7:09 AM
Colombo (News 1st) மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் இன்று (07) காலை 9 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கலடுவாவ முதல் மஹரகம வரை நீர் விநியோகிக்கும் பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்பிரகாரம் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலென்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளிலேயே இன்று காலை 9 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.