மலர் உற்பத்திக்காக புதிய பணியாளர்களுக்கு பயிற்சி

மலர் உற்பத்திக்காக புதிய பணியாளர்களுக்கு பயிற்சி

by Staff Writer 07-01-2020 | 7:41 AM
Colombo (News 1st) மலர் உற்பத்திக்காக புதிய பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகள் மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த உற்பத்தி திட்டத்திற்கு 5 இலட்சம் ரூபா வரையில் நிதியுதவி வழங்கப்பட்டதுடன் 74 குடும்பங்கள் தற்போது மலர் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கள் மற்றும் பயிற்சி வேலைத்திட்டங்கள் மாகாண பிரதி விவசாய அலுவலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.