by Staff Writer 07-01-2020 | 4:52 PM
Colombo (News 1st) குருணாகல் - மல்பிட்டிய பகுதியில் பஸ்ஸொன்றும் பௌஸர் ஒன்றும் மோதியதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மொரவக்க - வரல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் பஸ் ஒன்றுடன் சுகாதார அமைச்சிற்கு சொந்தமான வேன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த நால்வரும் கொஸ்வில்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் கொஸ்வில்கொட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக காலி - கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.