அம்பாறையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்செய்கைகள் அழிவு 

அம்பாறையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்செய்கைகள் அழிவு 

அம்பாறையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்செய்கைகள் அழிவு 

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2020 | 7:59 pm

Colombo (News 1st) :- கழுத்து அழுகல் பங்கஸ் மற்றும் அறக்கொட்டி நோயால் தமது பயிர்செய்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.

அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த இந்த நெற்செய்கை பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நிந்தவூர், சம்மாந்துறை , பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய பகுதிகளில் உள்ள நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில், தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்