புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாதத்துடன் நிறைவு

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாதத்துடன் நிறைவு

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாதத்துடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2020 | 9:13 am

Colombo (News 1st) புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியுடன் நிறைவுசெய்யப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

70 கட்சிகள் இதுவரை விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சில கட்சிகள் தமது கணக்கறிக்கையை சமர்ப்பிக்காததன் காரணமாக, அந்த கட்சிகளின் பதிவை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்