பதுளையில் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு

by Staff Writer 06-01-2020 | 6:12 PM
Colombo (News 1st) பசறை - மடுல்சீமை பிரதான வீதியின் ஆறாம் கட்டைப்பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 40 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பதுளை பசறையில் இருந்து எக்கிரிய நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்னர்.  

ஏனைய செய்திகள்