நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்குத் தடை

நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்குத் தடை

by Staff Writer 06-01-2020 | 3:17 PM
Colombo (News 1st) நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் முற்றாகத் தடை விதிக்கப்படுவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சோள இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போதிலும், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை இறக்குமதி செய்யுமாறு விவசாயத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. வருடாந்தம் நாட்டிற்கு 4 இலட்சம் மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படுவதுடன், 2 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கடலை பயன்பாட்டிற்குத் தேவைப்படுவதாகவும் விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.