English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Jan, 2020 | 7:19 pm
Colombo (News 1st) விசா காலம் நிறைவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 136 பேர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பில் இந்தியர்கள் 82 பேர், பாகிஸ்தானியர்கள் 12 பேர், மாலைதீவு பிரஜைகள் 10 பேர், நைஜீரியர்கள் 8 பேர், சீன நாட்டவர்கள் 6 பேர், பங்களாதேஷை சேர்ந்த ஒருவர், கனேடியர்கள் நால்வர், தாய்லாந்து நாட்டவர்கள் இருவர், சுவிட்சர்லாந்து பிரஜைகள் இருவர் மற்றும் அமெரிக்கர் ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, கத்தார், சுவீடன், ஆப்கானிஸ்தான், ஈரானிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில், விசா இன்றி நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களைக் கைது செய்யும் நோக்கில் இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
12 Jun, 2022 | 03:13 PM
03 Sep, 2021 | 05:53 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS