பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 05-01-2020 | 12:14 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில இன்று (05) பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களிலிருந்து அவதானமாக செயற்படுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.