நீர்கொழும்பின் சில பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

நீர்கொழும்பின் சில பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 05-01-2020 | 10:38 AM
Colombo (News 1st) நீர்கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் நாளை (06) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு, கொச்சிக்கடை, தூவ, பிட்டிபன, துன்கால்பிட்டிய, பாசியாவத்த, பமுனுகம மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், விமானப்படைத்தளம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.