சட்டவிரோத மணல் அகழ்வு; நால்வர் கைது

சட்டவிரோத மணல் அகழ்வு; நால்வர் கைது

by Staff Writer 05-01-2020 | 11:20 AM
Colombo (News 1st) தெதுருஓயாவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்கேநபர்களின் 2 படகுகளும் மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இன்று சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். தெதுருஓயாவில் மணல் அகழ்வதற்குத் தடை விதித்து நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.