English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Jan, 2020 | 1:45 pm
Colombo (News 1st) நாடு முழுவதும் நாளை மறுதினம் (07) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளதாக பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர கூறியுள்ளார்.
இதேவேளை, முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை முன்னிட்டு மேல் மாகாணத்தை கேந்திரமாகக் கொண்டு கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதன்போது, 96,351 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் மேல் மாகாண பணிப்பாளர் டொக்டர் W.A.Y. வெடிசிங்க தெரிவித்துள்ளார்.
நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 19,825 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 423 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வருடத்தின் கடந்த 4 நாட்களில் மேல் மாகாணத்தில் 485 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
17 Jul, 2022 | 02:22 PM
15 Feb, 2022 | 07:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS