உயர்தரத்தில் சித்தியடைந்த 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைப்பு

உயர்தரத்தில் சித்தியடைந்த 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைப்பு

உயர்தரத்தில் சித்தியடைந்த 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2020 | 7:50 am

Colombo (News 1st) இம்முறை உயர்தரத்தில் சித்தியடைந்த 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிரச FM இல் நேற்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திறந்த பல்கலைக்கழங்களில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது கூறியுள்ளார்.

அடுத்​த வாரமளவில் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இலகுவில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் பட்டப்படிப்பிற்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்