மானிய விலையில் மாட்டுத்தீவனம் வழங்குமாறு கோரிக்கை

மானிய விலையில் மாட்டுத்தீவனம் வழங்குமாறு கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை

by Staff Writer 04-01-2020 | 4:51 PM
Colombo (News 1st) கண்டி மாவட்டத்தில் பசும்பாலுக்கு உரிய விலை கிடைப்பதில்லையென பசு வளர்ப்பாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பசு ஒன்றுக்கான நாளாந்த தீவனத்திற்கு சுமார் 400 ரூபா செலவாகின்ற நிலையில், ஒரு லிட்டர் பாலுக்கு 60 ரூபா தொடக்கம் 70 ரூபா வரையே கிடைப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். கண்டி மாவட்டத்தில் தோட்டங்களில் வேலைவாய்ப்புகள் குறைவடைந்துள்ள நிலையில், பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பையே தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாலுக்கான உரிய விலையினை நிர்ணயிக்குமாறு அல்லது மானிய விலையில் மாட்டுத்தீவனத்தை வழங்குமாறு கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.