திரிபீடக நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் பங்கேற்பு

by Staff Writer 04-01-2020 | 8:36 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சுகததாச உள்ளக அரங்கில் இன்று நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட சிலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இதன்போது, டெப் கணினியில் பதிவேற்றப்பட்ட திரிபீடகம் 5,000 தேரர்களுக்கு வழங்கப்பட்டது. விஹஜ்ஜவாதீ 10 வருட திட்டம், இலங்கையிலுள்ள அனைத்து விஹாரைகளுக்கும் திரிபீடகத்தை வழங்கும் பெளத்த தர்ம நிதியம் தொடர்பான பிரேரணை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.