by Staff Writer 04-01-2020 | 5:36 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - மலையாளபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐவர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலையாளபுரம் - புது ஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் கடந்த 29 ஆம் திகதி ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் இது கொலைச்சம்பவம் என உறுதி செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் இன்று ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களால் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.