உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றியது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றியது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றியது

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2020 | 4:46 pm

Colombo (News 1st) தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

27 மாவட்டங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் தலா 13 மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் குழுத்தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளதுடன், சிவகங்கையில் இரண்டு கட்சிகளும் சமமான இடங்களைப் பெற்றுள்ளன.

மொத்தமாகவுள்ள 515 மாவட்ட ஊராட்சி வட்டார உறுப்பினர் பதவிகளில் தி.மு.க கூட்டணி 270 இடங்களிலும் அ.தி.மு.க கூட்டணி 242 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

5090 ஊராட்சி ஒன்றிய வட்டார உறுப்பினர் பதவிகளில் தி.மு.க கூட்டணி 2,338 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 2,185 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் 95 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் இதர கட்சிகள், சுயேட்சைகள் 444 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்