பாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

பாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு; புதிய நியமனங்கள் அறிவிப்பு

by Staff Writer 03-01-2020 | 3:28 PM
Colombo (News 1st) பாராளுமன்ற சபை நடவடிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி பகல் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று பகல் ஒரு மணிக்கு சபை கூடியது. இதன்போது, எதிர்கட்சித் தலைவர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கொறடாக்கள் ஆகியோரின் நியமனங்களை சபாநாயகர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். சபை முதல்வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டார். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். இதேவேளை, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டார். காலம் சென்ற ரஞ்சித் சொய்சாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட வருண லியனகே, சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்த வருண லியனகே, பின்னர் எதிர்க்கட்சிக்கு மாறினார்