பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு

by Staff Writer 03-01-2020 | 8:18 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் நேற்றிரவு (02) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. ஜனாதிபதியின் உரை தொடர்பிலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் அவர் பதிலளித்தார்.