தொண்டமனாறு கடலில் மூழ்கி இளைஞர் பலி

தொண்டமனாறு கடலில் மூழ்கி இளைஞர் பலி

by Staff Writer 03-01-2020 | 5:24 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலோலி பகுதியை சேர்ந்த 26 வயதான கந்தசாமி கஸ்தூரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை பகல் 1.15 அளவில் மீட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். தனது நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போது, குறித்த இளைஞர் நீரில் மூழ்கியுள்ளார். மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.