வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

by Staff Writer 02-01-2020 | 3:55 PM
Colombo (News 1st) வட மாகாண ஆளுநர் P.M.S. சார்ல்ஸ் இன்று (02) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இதற்கான நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. வட மாகாண ஆளுநரின் கடமையேற்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ். மாநகர மேயர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.