தாய்வான் ஹெலிகொப்டர் விபத்தில் எண்மர் உயிரிழப்பு

தாய்வானில் விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து: 8 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 02-01-2020 | 3:03 PM
Colombo (News 1st) தாய்வானின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படைத் தளபதி உள்ளிட்ட எண்மர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக குறித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது விமானப்படைத் தளபதி உள்ளிட்ட 13 அதிகாரிகள் ஹெலிகொப்டரில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.