பெரிய வெங்காய செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

மாத்தளையில் பெரிய வெங்காய செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 01-01-2020 | 6:35 PM
Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காய செய்கையை மேம்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் 4000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காய செய்கையை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. செய்கைக்கான தொழில்நுட்ப மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.