by Chandrasekaram Chandravadani 01-01-2020 | 3:38 PM
Colombo (News 1st) முதலாம் தவணை ஆரம்பத்திலேயே பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாதணிகளுக்கான வவுச்சர்களை பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான வவுச்சர்கள் பாடசாலைகள் மற்றும் கல்வி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இவ் வருடத்தின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (02) ஆரம்பமாகவுள்ளன.
பொருளாதார ரீதியில் பின்னடைவை எதிர்கொண்டுள்ள பாடசாலை மாணவர்களுக்காக பாதணிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அதற்கான வவுச்சர்களை பெற்றுக்கொடுப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.