எத்தனோல் இறக்குமதிக்குத் தடை

எத்தனோல் இறக்குமதிக்குத் தடை

by Staff Writer 01-01-2020 | 4:54 PM
Colombo (News 1st) மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் எத்தனோல் இறக்குமதி இன்று (01) தொடக்கம் தடை செய்யப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய உடன் அமுலாகும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதால், அவற்றை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.