அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ: எண்மர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ: எண்மர் உயிரிழப்பு

by Staff Writer 01-01-2020 | 4:59 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 200 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இதில் கிழக்கு கிப்ஸ்லன்ட் பகுதியில் 43 வீடுகளும் நியூசவுத் வேல்சில் 200 வீடுகளும் தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. விக்டோரியா மாநிலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நேற்று கடற்கரையை நாடியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்காக இராணுவ வானூர்திகளும் படகுகளும் அனுப்பப்பட்டிருந்தன. புதுவருட தினத்தில் சுமார் 112 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.