by Staff Writer 01-01-2020 | 3:43 PM
Colombo (News 1st) அம்பாறை - அக்கரைப்பற்று பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 5 கஜமுத்துக்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்கேநபர்களில் விமானப் படையினரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கஜமுத்துக்களை விற்பனை செய்யும்போதே அம்பாறை முகாம் அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.