ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

வவுனியாவில் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

by Staff Writer 31-12-2019 | 3:00 PM
Colombo (News 1st) வவுனியா - செட்டிக்குளத்தில் ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த இளைஞரை சோதித்தபோது, சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பூநகரி பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலஸார் தெரிவித்துள்ளனர். சந்கேநபர் 2 வருடங்களுக்கு முன்னர் தோஹா கத்தாரிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேகநபர் இன்று (31) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.