சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக பதவி

பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியாக சவேந்திர சில்வா நியமனம்

by Staff Writer 31-12-2019 | 5:31 PM
Colombo (News 1st) பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவிக்கு மேலதிகமாகவே, பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர குணவர்தன இன்றுடன் ஓய்வுபெறுகின்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.