முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை!

by Fazlullah Mubarak 30-12-2019 | 11:38 AM

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்னவின் உடல்நிலை குறித்து அறிவதற்காக, கொழும்பு பிரதம நீதவான் சலனி பெரேரா அன்றைய தினம் மாலை, நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். பாராளுமன்ற உறுப்பினரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பின் கீழ் அவருக்கு சிகிச்சையளிக்குமாறும் இதன்போது உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி வழங்கிய பரிந்துரை மற்றும் ஏனைய விடயங்களின் அடிப்படையில், ராஜித சேனாரத்னவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அவர் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்தது. எனினும், அவரின் உடல்நிலை தேறாமையால், அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்