வட மாகாண ஆளுநராக P.S.M. சார்ள்ஸ் பதவிப்பிரமாணம்

by Staff Writer 30-12-2019 | 4:30 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் புதிய ஆளுநராக P.S.M. சார்ள்ஸ் இன்று (30) பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அவர் இலங்கை சுங்கத்தில் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.