பொலிஸ் அத்தியட்சர்கள் 11 பேருக்கு பதவி உயர்வு

பொலிஸ் அத்தியட்சர்கள் 11 பேருக்கு பதவி உயர்வு

by Staff Writer 30-12-2019 | 2:42 PM
Colombo (News 1st) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேர், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், கடந்த 30 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 8 பேருக்கும் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மூவருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.