பதுளு ஓயாவில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

பதுளு ஓயாவில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

by Staff Writer 30-12-2019 | 7:35 PM
Colombo (News 1st) பதுளு ஓயாவின் ஹாலியெல பகுதியில் நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுமிகளின் சடலங்கள் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.