by Staff Writer 28-12-2019 | 2:49 PM
Colombo (News st) கொழும்பு - வௌ்ளவத்தை பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சிகரெட்க்களை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரை, நீதிமன்ற செயற்பாடுகளிலிருந்து விடுவித்துக்கொள்ள வௌ்ளவத்தை பொலிஸாருக்கு பணம் வழங்க வேண்டும் என கூறி குறித்த இருவரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்களால் மோடியாக பெற்றுக்கொள்ளப்பட்ட 1,90,000 ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
1800 சிகரெட்க்களை சட்டவிரோதமாக வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேகநபர் வௌ்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலும் 2 சந்தேகநபர்களால் குறித்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.