by Chandrasekaram Chandravadani 28-12-2019 | 4:31 PM
Colombo (News 1st) சோமாலிய தலைநகர் மொகாதிஷூவில் நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மொகாதிஷுவிலுள்ள சோதனை நிலையம் ஒன்றிலேயே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதுவரையில் 61 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கார்க்குண்டுத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்புக் கூறாதபோதும், அல் ஷபாப் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.