உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கான கால அவகாசம்

by Staff Writer 28-12-2019 | 2:44 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கு எதிர்வரும் 17ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு வௌியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும். இந்த இணையத்திளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக 48 மணித்தியாலங்களில் வீடுகளுக்கே பரீட்சை பெறுபேறு அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 1,81,123 பேர் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை இன்று தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.