பசுமைப்படுத்தல் திட்டத்தில் மரக்கன்றுகள் நாட்டல்

பசுமைப்படுத்தல் திட்டத்தில் மரக்கன்றுகள் நாட்டல்

by Staff Writer 27-12-2019 | 6:51 PM
Colombo (News 1st) நாட்டைப் பசுமைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. பசுமையான சுற்றாடலை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டம் ஒரு வாரகாலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனிடையே பசுமைப்படுத்தல் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக 20 இலட்சம் வீட்டுத் தோட்டங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. நாட்டில் காடுகளின் அடர்த்தியை 32 சதவீதம் வரை அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.