Colombo (News 1st) கஸக்ஸ்தானின் (Kazakhstan) அல்மாட்டி விமான நிலையத்துக்கருகில் இருந்து 100 பேருடன் சென்ற பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கஸக்ஸ்தானின் பெரிய நகரமான அல்மாட்டிலிருந்து தலைநகர் நர்சுல்தான் வரையில் சேவையில் ஈடுபடும் விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
அதேநேரம், விபத்து சம்பவித்த நேரத்தில் கடுமையான மூடுபனி காணப்பட்டுள்ளதாக ரோயிட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசேட ஆணைக்குழுவினூடாக விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.