by Staff Writer 26-12-2019 | 4:02 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வத்தளை, பேலியகொட, மாபோல ஆகிய நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, களனி மற்றும் வத்தளை ஆகிய பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக நீர் விநியோகம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
கசிவு ஏற்பட்டுள்ள குழாய் புனரமைக்கப்படும் வரை நீர் விநியோகத்தை முன்னெடுக்க முடியாது என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.