உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை

by Staff Writer 26-12-2019 | 3:00 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளைய தினம் (27) வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறு வௌியீடு குறித்து நியூஸ்பெஸ்ட் வினவியபோதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்பட்டது. இதில் 3,37,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.