ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு  

by Staff Writer 24-12-2019 | 5:09 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்காக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியன முன்வைத்த விடயங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று பிற்பகல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. வௌ்ளை வேன் கடத்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியமை தொடர்பில் ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.