ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானார்

ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானார்

by Staff Writer 24-12-2019 | 2:45 PM
Colombo (News 1st) உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன இன்று (24) இயற்கை எய்தியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே 63 வயதில் அவர் இயற்கை எய்தியுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக செயற்பட்டுள்ள பிரசன்ன ஜயவர்தன, கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பிரசன்ன ஜயவர்தன செயற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.