by Staff Writer 24-12-2019 | 7:41 PM
Colombo (News 1st) இந்தோனேசியாவின் ஆறொன்றில் பஸ்ஸொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
சுமத்ராவின் தென் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சுமார் 50 பயணிகள் வரை குறித்த பஸ்ஸில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.