வௌ்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் சாரதிக்கு விளக்கமறியல்

வௌ்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் சாரதி, நடத்துநருக்கு விளக்கமறியல்

by Staff Writer 22-12-2019 | 1:14 PM
Colombo (News 1st) பொலன்னறுவை - மனம்பிட்டிய, கல்லேல்ல பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்னர். சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கவனயீனமாக வாகனம் செலுத்தியமை மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளால் பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். குறித்த பஸ் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டிய கல்லேல்ல பகுதியில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் 54 பயணிகள் பயணித்துள்ளனர். மாதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் சிறுபிள்ளைகளும் கர்ப்பிணி பெண்களும் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்