by Staff Writer 20-12-2019 | 7:10 PM
Colombo (News 1st) வாரியபொல சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
கைதி ஒருவரால் மற்றுமொரு கைதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கைதி வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெறும் வழக்கொன்றில் கைதி, போலிக் கடவுச்சீட்டை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கைதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.