ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

by Staff Writer 20-12-2019 | 4:25 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் பிரதம நீதவானினால் முன்பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.