தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சலுகை

தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சலுகை

by Staff Writer 20-12-2019 | 3:39 PM
Colombo (News 1st) தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக இலங்கை மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் பெற்றுள்ள கடனில் 20 முதல் 30 வீதமானவற்றை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, பெற்ற கடனை மீண்டும் செலுத்துவதற்கு சலுகைக் காலம் வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இலங்கை தேயிலை சபையின் அபிவிருத்தி நிதியத்தில் 500 மில்லியன் ரூபாவை ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கி ஒன்றினூடாக தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு வழங்கும் சலுகை முறைமை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.