MCC தற்காலிக இடைநிறுத்தம்; மீளாய்விற்கு விசேட குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 19-12-2019 | 8:07 PM
Colombo (News 1st) MCC உடன்படிக்கை தொடர்பிலான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி, உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நான்கு பேரடங்கிய குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பிரிவின் கலாநிதி லலித் குணருவன், வாஸ்து சாஸ்திர நிபுணர் நாலக்க ஜயவீர, போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் டீ.எஸ். ஜயவீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன ஆகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.