வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க நடவடிக்கை

வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை

by Staff Writer 19-12-2019 | 4:29 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவயிலிருந்து ஓமந்தை வரையான பகுதி சீரின்மையால், ரயில் போக்குவரத்து மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். பொல்கஹவெல வரை மாத்திரம் காணப்படும் இரண்டு ரயில் பாதைகள் அடங்கிய மார்க்கத்தை மஹவ வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.