by Bella Dalima 19-12-2019 | 4:20 PM
Colombo (News 1st) புறக்கோட்டை மிதக்கும் சந்தைத் தொகுதியை விரைவில் மறுசீரமைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
103 வர்த்தகக் கடைத்தொகுதிகளைக் கொண்ட மிதக்கும் சந்தை 312 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது.
எனினும், உரிய பராமரிப்பின்றி காணப்படும் குறித்த சந்தை தொகுதியின் பராமரிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மெருகூட்டல் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான விடயங்களை நிவர்த்திக்கும் வகையில் புறக்கோட்டை மிதக்கும் சந்தைத் தொகுதி மறுசீரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.